பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

Filed under: சினிமா |

“மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது. ரிலீசான இத்திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலில் இத்திரைப்படம் சோடை போகவில்லை என தெரிகிறது. முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரிலீசாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் சமீபத்தைய படமான “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்பார்ப்போடு தெலுங்கில் ரிலீசாகி தோல்வி அடைந்தது. இப்போது “மாவீர்டு” திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் தெலுங்கை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையை அவர் பாலிவுட்டில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.