பிச்சைக்காரரிடம் பணத்தை அபகரித்த காங்கிரஸ் பிரமுகர்!

Filed under: தமிழகம் |

காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பிச்சைக்காரரை அடித்து அவரிடமிருந்து 20 ஆயிரத்தை பணத்தை அபகரித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 8 ஆண்டுகளாக ராமன் ஜி என்பவர் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு போக சேமித்து வைத்துள்ளார். மது போதையில் மூன்று வாலிபர்கள் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி 20 ஆயிரம் பணத்தை அபகரித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போது காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்தான் இச்செயலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பிரமுகரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பிச்சைக்காரரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பணத்தை அபகரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.