பிடிஆர் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி!

Filed under: அரசியல்,தமிழகம் |

சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நிதியமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது. வருகிறது.

தற்போது பிடிஆர் பேசியதாக கூறப்படும் மூன்றாவது ஆடியோ விரைவில் வெளியாகப் போவதாகவும், இந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தின் முக்கிய நபர் குறித்த அதிர்ச்சி தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இரண்டு ஆடியோவுக்கே திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது ஆடியோ வெளியானால் என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சமூக வலைதளங்களில் வேண்டும் என்று வதந்தி பரப்பப்படுகிறது என்று பிடிஆரின் அடுத்த ஆடியோ வெளிவர வாய்ப்பேயில்லை என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.