பியூட்டி பார்லர் மீது இளம்பெண் புகார்!

Filed under: இந்தியா |

பியூட்டி பார்லருக்கு சென்ற பெண் அங்கு முடிவெட்டிக் கொள்வதற்காக எண்ணெய் தடவியதும், கையுடன் தலைமுடி கொத்தாக வந்ததில் அதிர்ச்சியடைந்ததால் போலீசில் புகாரளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகர், ஓல்ட் சிட்டியைச் சேர்ந்த பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக அருகில் உள்ள அபிட்ச் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றிருந்தார். பார்லரில் இருந்த அழகுக்கலை நிபுணர் அப்பெண்ணுக்கு தலைமுடியில் ஒருவித எண்ணெய்யை தடவி, அதன்பின்னர், முடியை வெட்டியதாகவும், பின், தலைமுடி கொத்தாக கொட்டி, கொஞ்ச நேரத்திலேயே உச்சந்தலையில் இருந்த அனைத்து முடிகள் உதிர்ந்துவிட்டதால் அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டிற்கு திரும்பிய அவரைப் பார்த்து கணவர் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அப்பெண்ணுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது. அதன்பின்னர், அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அந்த பியூட்டி பார்லர் மீது புகார் அளித்துள்ளார். இப்புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.