பிரதமரை புகழ்ந்த இசைஞானி!

Filed under: அரசியல்,இந்தியா |

பிரதமர் மோடியை பார்த்து வியப்பாக உள்ளதாக இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

இன்று வாரணாசியில் காசி தமிழ் சங்க விழா நடைபெற்றது. இவ்விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விழாவில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நடைபெற்றது. அவர் பிரதமரை பார்த்து வியந்து பேசினார். “பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். பெருமை மிகுந்த இந்த காசி நகரில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன். காசி நகரத்தில் பாரதியார் இரண்டு வருடம் இருந்திருக்கின்றார். அவர் இங்கே கற்றுக்கொண்ட விஷயங்களை தனது பாடல்களில் குறிப்பிட்டுருக்கின்றார்” என்று இளையராஜா பேசினார்.