பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

Filed under: அரசியல்,இந்தியா |

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாஜக ஆட்சி இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 3வது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்றாவது முறையும் வாரணாசி தொகுதியிலேயே களமிறங்குகிறார். இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக புனித நதியான கங்கையில் பிரதமர் மோடி நீராடி பிரார்த்தனை செய்து சிறப்பு பூஜை செய்தார். பிறகு பேசிய பிரதமர் மோடி “கங்கை நதி என்னை தத்தெடுத்துக் கொண்டுள்ளது. எனது தாயின் மறைவுக்கு பின் அவருடனான நெருக்கத்தை கங்கை நதியிடம் உணர்கிறேன். கங்கை நதி தாயை போல அனைவரையும் காக்கிறது. 140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுளின் ஆணை” என கூறியுள்ளார். தன் தாய் குறித்து பேசியபோது அவர் கண் கலங்கினார்.