பிரதமர் மோடி கூடுதல் நிதி பற்றி தகவல்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 2.5 மடங்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முந்தைய காலங்களை விட தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதன் பின் பிரதமர் மோடி பேசியபோது “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வரலாறு காணாத நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு எவ்வளவு நிதி பெற்றதோ அதைவிட இரண்டரை மடங்கு அதிகமாக கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.