பிரதமர் மோடி பெருமிதம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்வதாக பேசினார்.

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இவ்வாண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது, பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர். பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி பெறுகிறது, கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடி கூறினார்.