பிரபல நடிகர் தொழிற்சாலையில் நச்சுப் புகை?

Filed under: சினிமா,தமிழகம் |

திருப்பூர் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் நச்சுப் புகை வெளியேறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. தொழிற்சாலையிலிருந்து நச்சுப் புகை வெளியேறுவதால் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள 3 வேலம்பாளையம் வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இருந்து நச்சுப் புகை வெளியேறிவருவதாகவும், இதனால் சுவாசக் கோளாறு, மற்றும் நச்சுப் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்று முற்றுப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண், “இங்கு தார் தொழிற்சாலையால் ரொம்ம வாசம் வருகிறது நேற்று முன்தினம் இந்த நச்சுப்புகையால் மூச்செடுக்க முடியாமல் மாரடைப்பு வந்து இறந்துவிட்டார், குழந்தைகள் மற்றும் மக்களால் மூச்செடுக்க முடியவில்லை. இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம்“ தெரிவித்துள்ளார்.