பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு

Filed under: உலகம்,தமிழகம் |

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில், “பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்களை நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.