பிரியங்கா காந்தியின் வாக்குறுதி!

Filed under: அரசியல்,இந்தியா |

நாளை நடைபெறவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன.

பாஜக அரை லிட்டர் பால் இலவசம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் கொடுத்தது. கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பிரியங்கா காந்தி அங்கும் சில இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளார். 18 வயது பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு இலவசம் மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இளைஞர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த 10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.