பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு!

Filed under: தமிழகம் |

+2 மாணவி தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பும் வழியில் இளைஞர் ஒருவர் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி பகுதியிலுள்ள செக்காரக்குடி கிராமத்தில் +2 மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த மாணவி அந்த வாலிபரை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவி மீது சரமாரியாக சோலையப்பன் வெட்டியதை அடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். மாணவி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மாணவியை வெட்டிய வாலிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.