புதிய கெட்அப்புக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகி 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது.

தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, “லியோ” படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு பட்ஜெட்டாக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் நடிக்க பிரதீப்புக்கு 15 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது ஹீரோ ஆகிவிட்டதால் தன்னுடைய லுக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளாராம். தன்னுடைய தோற்றத்தை பொலிவாக மாற்ற சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.