புது மாப்பிள்ளை ஒட்டிய கார் விபத்து!

Filed under: இந்தியா |

புதிதாக திருமணமான மாப்பிள்ளை மாமனார் வீட்டிலிருந்து சீதனமாக தந்த காரை ஒட்டி பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்பூர் அருகே ஒரு இளைஞருக்கு நடந்த திருமணத்திற்காக பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக புதிய கார் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரை பார்த்ததும் மாப்பிள்ளை காரை ஓட்டிப் பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் காரை ஓட்டியபோது அருகே இருந்த உறவினர்களின் கூட்டத்தில் புகுந்தது. இதில் மாப்பிள்ளையின் அத்தை உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து மாப்பிள்ளையிடம் விசாரித்தபோது அவருக்கு கார் ஓட்ட தெரியாது என்றும் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் ஓட்டத் தெரியாத மாப்பிள்ளைக்கு பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக கார் வழங்கப்பட்டதும், அந்த கார் விபத்து ஏற்பட்டு உறவினர் ஒருவர் பலியாகி உள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.