கர்ப்பிணி பெண் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓய்வறையில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவமாகி, பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பிரவீனா என்ற 37 வயது பெண், ஓய்வறையில் படுத்திருந்து எழுந்த போது திடீரென வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். அப்போது குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து, தாய், சேய் என இருவரையும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உதவி செய்தனர். கீழே விழுந்த குழந்தை படுகாயம் அடைந்திருந்ததால், அக்குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதைக்கேட்டு தாய் கதறி அழுத காட்சியை கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.