பொங்கல் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி!

Filed under: சினிமா |

திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஜனவரி 12 முதல் 18ம் தேதி வரை சிறப்புக்காட்சி திரையிடுவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்.

அஜீத் நடித்துள்ள “துணிவு,” விஜய் நடித்த “வாரிசு” ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கு விரைவில் தமிழக அரசு பதில் அளிக்கும் என்றும் சிறப்பு காட்சியை திரையிட அனுமதி அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.