பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது. இதுதீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடியின் வசம் இருந்த உயர் கல்வித் துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடியும், அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சொத்து குறித்த முழு விவரங்களை தெரிவித்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.