பொய் செய்திகளை பரப்புபவர்களுக்கு அமைச்சர் விளக்கம்!

Filed under: அரசியல் |

அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருக்கின்றதா என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 327 அத்தியாவசியமான மருந்துகளை மக்களுக்கு தடையில்லாமல் கொடுத்து வருகிறோம். ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை மருத்துவ சேவையை அப்பழுக்கற்ற சேவையாக செய்து வருகிறோம். மேலும் மருந்து தடுப்பாடு என்ற சந்தேகம் தோன்றினால் கையிருப்பில் உள்ள மருந்துகளை காட்டுவதற்கு அவர்களை அழைத்து செல்கிறோம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.