போராட்ட குறித்த தேதி அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி!

Filed under: அரசியல்,தமிழகம் |

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுனர் மாளிகை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். டிசம்பர் 29ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்குறள் என்பது இந்துக்களின் குரல் என்பது உலகப் பொது மறையை இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகம் போல் பயன்படுத்தும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.