மகனே தந்தையை 30 துண்டுகளாக வெட்டிய பகீர் சம்பவம்!

Filed under: இந்தியா |

தன் தந்தையை 30 துண்டுகளாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டத்திலுள்ள முதோல் நகரில் வசித்த பரசுராம் குலாலியின் மகன் வித்தலா(20). பரசுராம் குலாலி, தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இதேபோல், குலாலி, தன் மகன் வித்தலாவை எதோ பேசியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தவே, ஆத்திரமடைந்த வித்தலா, ஒரு இரும்புக் கம்பியை எடுத்து, தந்தையை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரசுராம் உடலை மீட்டு, வித்தலாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.