மதுபானங்கள் விலை குறித்து அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபான விலை ஏற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டியளித்தபோது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மதுபானம் விலை உள்பட அனைத்து விலைகளும் உயர்த்தப்பட உள்ளது. இந்த பக்கம் கொடுப்பது போல் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களிடமிருந்து அரசு பணத்தை வாங்கிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலையேற்றத்திற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. அனைத்து மதுபானங்களுக்கும் விலை உயர்த்தப்படவில்லை, ஒரு சில குறிப்பிட்ட மதுபானங்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.