மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் திமுக; பிரதமர் மோடி

Filed under: அரசியல்,தமிழகம் |

பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிப்பதாகவும், இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது. இந்து தவிர வேறு மதங்களை இந்தியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை, இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுகின்றனர். இந்து தர்மத்தை அழிப்பது மட்டுமே இந்தியா கூட்டணி நோக்கமாக உள்ளது, சக்தியை அழிக்க நினைப்பவர்களை அந்த சக்தியே அழித்துவிடும். ஏப்ரல் 19ம் தேதி உங்கள் வாக்குகளின் மூலம் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு அழிவை தாருங்கள். தமிழகத்தை புண்ணியம் பூமியாக மாற்றுவோம், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலைகளை உருவாக்கியுள்ளது பாஜக என்றும் சுயசார்பு இந்தியாவை அடைவதில் பாஜக முனைப்போடு இருக்கிறது. நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நோக்கம். தமிழ்நாடு வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். வலிமையான பாரதத்தை உருவாக்கும் சபதத்துடன் தலைவர்கள் நம்முடன் இணைந்துள்ளனர். தமிழகம் புதிய உச்சத்திற்கு செல்லும். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.