மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

Filed under: சினிமா |

சென்னை ஐகோர்ட் நடிகை திரிஷா உள்ளிட்ட 3 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில வாரங்களுக்கு முன், நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து திரிஷா தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் திடீரென மன்சூர் அலிகான் திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகிய மூன்று பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த்து. மேலும் இந்த தொகையை இரண்டு வாரங்களில் அவர் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.