மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசம்!

Filed under: அரசியல்,இந்தியா |

இன்று பாராளுமன்றத்தில் “மோடி என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்க்கலாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இன்று பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சியினர்களை கிழிக்க போகிறார் என பாஜக எம்பிகள் குரல் எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, ஆவேசமாக “நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வரட்டும், அவர் என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.