மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை!

Filed under: தமிழகம் |

முன்னாள் தலைமை செயலர் இறையன்பு ஐஏஎஸ் மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி தனியார் கல்லூரியில் கல்லூரி காலங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் கலந்து கொண்டு பேசியபோது, “மாணவர்கள் தங்களுக்கான முயற்சிகளை தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பகட்டுத்தனம் மற்றும் ஆடம்பரம் ஆகியவை உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தாது. கடினமாக உழையுங்கள்,பிறரை அரவணைத்துச் செல்லுங்கள். கல்லூரி என்பது உங்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இடம் இங்கு நீங்கள் தேவையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயணம் செய்யுங்கள். செல்போன் மற்றும் மடிக்கணினி போன்றவை உங்களுடைய முயற்சிகளை முடக்கும். ஒரு மணி நேரம் உட்கார்ந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும் இது உடற்கூரில் உள்ள இயல்பாடு. ஆனால் செல்போனை வைத்துக் கொண்டு பல மணி நேரங்கள் நாம் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. திட்டமிடுங்கள் திட்டத்தை செயல்படுத்துங்கள் செயல்படுத்தியவற்றை நடைமுறைப்படுத்துங்கள் வெற்றி உங்களுக்காக அமையும்” என்று கூறினார்.