மாணவர் சேர்க்கையே இல்லாத 44 பொறியியல் கல்லூரிகள்!

Filed under: தமிழகம் |

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் “தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கையே நடந்திருக்கிறது” என்று பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Industry and technology concept. INDUSTRY 4.0

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் முற்றிலுமாக நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கு நாளுக்கு நாள் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும் கல்லூரி என்ற பெயரில் எவ்விதமான வசதியும் இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை” என்றும் கூறப்பட்டு வருகிறது.