மின்னணு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்! ராகுல் காந்தி டுவிட்!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என்று டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் கூறியிருந்தார்.