மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணி படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Filed under: சினிமா |

மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் எடுக்க வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் படமாக்கி முடித்த படக்குழு, கடந்த சில வாரங்களாக மேட்டுப்பாளையத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கியது. இதோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.