மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

Filed under: அரசியல்,இந்தியா |

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இச்சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டனர். இவ்விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியானது. அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், உணவு ஆகியவை குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை இன்றிரவுக்குள் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியானது. தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய பேரியர் மேலாண்மை ஆணையம் விளக்கமளித்தது. சொன்னபடியே தேசிய மீட்பு படை உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்டது. மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றதோடு, உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அச்சுரங்கப்பாதை மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.