மீண்டும் சூர்யா -கௌதம் மேனன் கூட்டணி!

Filed under: சினிமா |

“துருவ நட்சத்திரம்” கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இத்திரைப்படத்தை முடித்தது குறித்து இயக்குனர் கௌதம் மேனன், “போதிய பணம் இல்லாததால் இந்த படத்தை முடிக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் அப்போது படங்களில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டுதான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்தேன். இனிமேல் தொடர்ந்து முழுக்க முழுக்க இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். இனிமேல் நடிக்கப் போவதில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் “துருவ நட்சத்திரம்” படத்துக்கு பிறகு கௌதம் மேனன் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அவர் அடுத்து சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏறகனவே அவர்கள் இணைந்த ‘காக்க காக்க’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.