மீண்டும் தமிழ் படத்தில் டாப்ஸி!

Filed under: சினிமா |

“ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. பல மொழி படங்களில் நடித்து வந்தவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த “சபாஷ்” மீது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு டாப்ஸி தமிழில் “அனபெல் சேதுபதி” படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வியடைந்தது. அதையடுத்து அவர் இந்தி திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இப்போது அவர் “ஏலியன்” தமிழ்ப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதை அவரே சமீபத்தில் ரசிகர்களுடன் உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார். படம் பற்றி பேசிய டாப்ஸி “நான் இந்த படத்தில் ஏலியனாக நடிக்கவில்லை. படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.