மீண்டும் தொடங்கிய “கங்குவா” ஷூட்டிங்!

Filed under: சினிமா |

“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் சூர்யா. இதையடுத்து வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் இடம்பெறுவது போல சில காட்சிகளை இணைக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார். இதற்காக இப்போது பாண்டிச்சேரியில் “கங்குவா” படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா இரண்டு நாட்கள் மட்டும் நடிக்க உள்ளாராம்.