முதலமைச்சர் சித்தராமையா நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

சமீபத்தில் புதிய நாடாளுமன்றாத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.

இதற்கு, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனர். தென் மாநிலங்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதுடன், நாளை கர்நாடகம் அரசு சார்பில் டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கர்நாடகத்திற்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தொடந்து நடந்துகொள்கிறது. இதைக் கண்டித்து, நாளை டில்லியில் கர்நாடகம் அரசு சார்பில் நடைபெறும் ‘சிலீணீறீஷீ ஞிமீறீலீவீ‘ போராட்டத்தில் கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த இடைக்கால பட்ஜெட் பற்றி காங்கிரஸ் எம்.பி., எ.டி.கே.சுரேஷ்குமார் தனிநாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.