முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் வேலுமணி திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை. கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூரில் பேருந்து முனையம் அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கினோம். ஆனால் திமுக அரசு அந்த நிதியை வீணாக்கி வருகிறது. தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் பணிகள் முறையாக நடக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.