மெட்ரோ பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்!

Filed under: இந்தியா |

மெட்ரோ ரயில் பணிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அங்கு திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்து சில நாட்களாக கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அசோக் நகர் என்ற பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனை கவனித்த அதிகாரிகள் அதை சுற்றி வேலியமைத்து விபத்து ஏற்படாத வகையில் தடுத்தனர். பள்ளம் ஏற்பட்டது எதனால் என்பது குறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 40% கமிஷன் வாங்கிக்கொண்டு மெட்ரோ பணிகள் செய்வதால் தான் தரமற்ற வகையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.