மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

Filed under: தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் தொடங்கும். 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் இருக்கும். அவ்வகையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28ம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் நேரத்தில் பொதுமக்கள் முன் ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திர நேரத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும், எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியே வராமல் இருக்க வேண்டும். மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குவதை அடுத்து தமிழ்நாட்டில் உச்சபட்ச வெப்பநிலை இருக்கும் என்று என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.