மொபைல் பாஸ்வேர்டு தராததால் மாணவன் கொலை!

Filed under: இந்தியா |

நான்கு நண்பர்கள் மொபைல் கேம் பாஸ்வேர்டு தராததால் ஒரு மாணவனை கொலை செய்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பாப்பை தாஸ் என்ற 18 வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் தனது சக நண்பர்களுக்கு மொபைல் பாஸ்வேர்டை கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நான்கு நண்பர்கள் பாப்பை தாஸ் என்ற மாணவனை கொலை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து நான்கு நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைன் மொபைல் கேம் விளையாடுவதற்கு பாஸ்வேர்டை பகிரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பத்தாம் வகுப்பு மாணவனை அவரது சக மாணவர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.