மோகன்ராஜாவின் மாஸ் திட்டம்!

Filed under: சினிமா |

கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் “தனி ஒருவன்.” இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து ஏ.எல்விஜய் இயக்கத்தில் உருவான வீடியோ ஒன்றும் வெளியானது.

“தனி ஒருவன்” திரைப்படத்தின் முதல் பாகத்தில் அரவிந்த் சாமியின் வில்லன் சித்தார்த் கேரக்டர் மரணமடையும் வகையில் இருக்கும். “தனி ஒருவன் 2” திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கேரக்டருக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை என்பதால் மீண்டும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் வந்த சித்தார்த் மகன் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்திற்கு இசையமைத்த ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கவில்லை என்றாலும் சாம் சிஎஸ் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.