மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

உத்தவ் தாக்கரே இதுவரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசியிருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிதிஷ்குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே “நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார். மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் தந்தை தான் அவருக்கு உதவி செய்தார், ஆனால் மோடியோ எங்கள் எதிரிக்கு உதவி செய்து என்னுடைய கட்சியை உடைத்து உள்ளார்” என்று கூறியுள்ளார். இருப்பினும் உத்தவ் தாக்கரே தான் மோடிக்கு எதிரியில்லை என்று கூறியதையடுத்து மீண்டும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஏற்படுமா? மீண்டும் இந்தியா கூட்டணியை உடையுமா? என்று அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பி உள்ளது.