ரஜினியை பற்றி கூறிய மாளவிகா மோகனன்!

Filed under: சினிமா |

நடிகை மாளவிகா மோகனன் “பட்டம் போல,” “பியாண்ட் த கிளவுட்ஸ்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பேட்ட,” “மாறன்,” விஜயுடன் இணைந்து “மாஸ்டர்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவக்குமார், சிம்ரன் ரவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “பேட்ட.” இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.160 கோடி வசூலானது. படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இப்படத்தில் பணியாற்றி பலரும் தங்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். நடிகை மாளவிகா மோகனன், “பேட்ட படம்தான் என் முதல் தமிழ் படம். இதில் நடிக்க நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம் ரஜினி சார் தான். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு. முதல் நாள் ஷூட்டிங்கின்போது அவர் உள்ளே வந்ததும் அனைவரும் அமைதியாகினர். என் முதல் காட்சி அவருடன் தான் என்பதால் என்னிடம் ரஜினி சார் நன்றாக பேசினார். அடுத்த நாள் படம் முழுவதும் என்னை அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். என் நடிப்பிற்கு முதன் முதலாக கைதட்டியவர் அவர் தான். அவர்தான் என்னை பெரிய நடிகையாக வருவேன் என ஊக்கப்படுத்தினார்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.