ரத்தம் கொண்டு செல்லும் டிரோன்கள்!

Filed under: இந்தியா |

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டிரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து இம்முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் துரிதமாக ரத்தத்தை டிரோன் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடத்தப்பட்டது. இந்த டிரோன் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தம் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பது குறித்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சியை கவுன்சில் ஈடுபட்டது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து இனி அடுத்தடுத்து டிரோன்கள் மூலம் வெகு விரைவில் தேவையான நபருக்கு ரத்தம் மற்றும் மருந்துகள் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.