சாத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான பூஜை சாத் பூஜை. இந்த பூஜைக்காக வடமாநிலத்தவர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். ஆனால் இதுவரையிலும் இல்லாத அளவில் ரயில்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சவீதா விரைவு ரயிலில் அடிப்படைக் கட்டணம் ரூ.2950 என்றாலும், டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ6555 வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இக்கட்டண உயர்வினால் புலம்பெயர் தொழிலார்கள், பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் குறைக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related posts:
#BIGBREKING:டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்டத் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
"கோவேக்சின்" தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி!
தொலைத் தொடர்பு சேவை வர்த்தகத்தில் இணைகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்கள் !