ராகுலுக்கு பறந்த உத்தரவு!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் வரும் ஜூலை 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு விசாரணை உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வரும் ஜூலை 2ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி 20ம் தேதி அமேதியில் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு இடையே, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.