ராஜமௌலி பாலிவுட் படங்களை பற்றி கருத்து!

Filed under: சினிமா |

சமீபகாலமாக பாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எதிராக பாய்காட் டிரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர்கானின் “லால் சிங் சத்தா” உட்பட பல திரைப்படங்களுக்கு இப்படியான ஹேஷ்டேக்குகள் உருவாக்கியதால் படத்தின் வசூலை கடுமையாக பாதித்துள்ளது.

பாலிவுட் சினிமாவுக்கு இவ்வாண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பலரும் பாலிவுட் சினிமாக்கள் தங்கள் பெயர்களை பேசுவதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமௌலி “பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனால் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அதிக தொகை செலவு செய்யப்படுகிறது. ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று தெரியாமல் படத்தை எடுக்கிறார்கள். பாலிவுட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற பசி குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.