ராதிகா சரத்குமார் மோடிக்கு புகழாரம்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

வருகிற ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழ் நாட்டில் அதிமுக, திமுகவுக்கு எதிராக பாஜக போட்டியிடும் நிலையில், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர். விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று பிரசாரத்தில், “தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் மோடி. என்னை வெற்றிபெறச் செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்குச் சேவை செய்வேன். மதுரையில் 33 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். விருது நகரில் ரூ.2489 கோடியில் ஜவுளிபூங்கா கொண்டு வந்தது பாஜக அரசுதான்” என்று தெரிவித்தார்.