ரிஸ்க் எடுத்து நடிக்கும் தனுஷ்!

Filed under: சினிமா |

சில மாதங்களுக்கு முன் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி”யில் தனுஷ் நடிப்பில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். “குபேரா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. இதையடுத்து ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது மும்பை தாராவி பகுதிகளில் “குபேரா” படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஒரு குப்பைக் கிடங்கில் படமாக்கப்பட்டது. காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 10 மணிநேரமும் அந்த குப்பை கிடங்கிலேயே நின்று தனுஷ் நடித்துக் கொடுத்தாராம். படம் வெளியாகும் போது இக்காட்சி பேசுபொருளாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.