ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

Filed under: இந்தியா |

20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் திருப்பதியில் 600 கோடி செலவில் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் வகையில் திருப்பதியில் மையம் உள்ளது.- தற்போது புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இவ்வாண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 413 பூசாரிகள் மற்றும் பிற காலியிடங்களை நிரப்ப மாநில அரசின் ஒப்புதலையும் தேவஸ்தானம் பெற்றுள்ளது.