வருமான வரித்துறையின் விளக்கம்!

Filed under: அரசியல் |

வருமான வரித்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரிபாக்கியில் 20% மட்டுமே செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் அதை முன்னாள் அமைச்சர் செலுத்தவில்லை என்றும் அதனால் அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் மூடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. விஜயபாஸ்கர் 206 கோடி வரிக்காக 117 ஏக்கர் நிலம் 4 வங்கி கணக்குகள் ஆகியவற்றை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.