வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

தேர்தல் ஆணையம் கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், “கண்ட்ரோல் யூனிட் வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும், அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும், இதைதொடர்ந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனுப்பும் பதிலை மீண்டும் கண்ட்ரோல் யூனிட் பதிவு செய்து கொள்ளும், இதுதான் கண்ட்ரோல் யூனிட் செயல்பாடு, EVM & VVPAT இயந்திரங்கள் தொடர்பான கேள்விகள் வெறும் பயம் மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘கண்ட்ரோல் யூனிட் எனப்படும் மூல இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பு விளக்கமளித்துள்ளது.