வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டு!

Filed under: அரசியல்,தமிழகம் |

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை கோவையிலிருந்து பாஜக சார்பில் அனுப்பி வைக்கும் பணியை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம், “பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர் உள்ளிட்டவரை காப்பாற்றுவதற்காக பாடுபடும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.